ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சி? - எஸ்டேட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை..சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சி? – எஸ்டேட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 26, 2026, 10:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபா் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட்டில் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த 21 வயது இளைஞரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். மார்-ஏ-லாகோவில் என்ன நடந்தது? யார் அந்த இளைஞர் ? என்ன காரணத்துக்காக ட்ரம்பை கொலைசெய்ய வந்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள அதிபர் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட் இல்லத்துக்குள், துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனிஸ்டருடன் 21 வயதுடைய இளைஞர் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியையும், பெட்ரோல் கேனிஸ்டரையும் கீழே போட்டுவிட்டு அந்த இளைஞரைச் சரணடையுமாறு தெரிவித்தனா்.

தாம் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அந்த இளைஞர், கேனிஸ்டரை கீழே வைத்தபோது பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி சுடுவதற்காக தனது துப்பாக்கியால் குறிவைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் அந்த இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்றபோது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் புளோரிடா எஸ்டேட்டில் இல்லாமல் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட் இல்லத்துக்குள், அத்துமீறிய இளைஞர் வடக்கு கரோலினாவைச் சோ்ந்த 21 வயதான ஆஸ்டின் டக்கர் மாா்டின் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது. எதற்காக அவா் அதிபரின் இல்லத்துக்குள் நுழைந்தாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

வடகரோலினாவில் உள்ள மார்டினின் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே மார்ட்டின் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

2023-ல் கேமரூனில் உள்ள யூனியன் பைன்ஸ் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த மார்டின் கடந்த ஜூன் மாதம் ‘ஃப்ரெஷ் ஸ்கை இல்லஸ்ட்ரேஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

“கோல்ஃப் மைதானக் காட்சிகளை விளக்குவதன் மூலமும், பல்வேறு கோல்ஃப் மைதான பரிசுக் கடைகளில் கையால் செய்யப்பட்ட படைப்புகளின் நகல்களை வழங்குவதன் மூலமும் கோல்ஃப் மைதானத்தில் இருப்பது போன்ற நம்பிக்கையான உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு கலைப்படைப்பு நிறுவனமாகும்.

தொடர்ந்து தான் வரைந்த வரைபடங்களை தனது முகநூலில் பதிவிட்டு வந்துள்ளார். கடந்த வியாழக் கிழமையில் தனது கடைசி வரைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளரான மார்டின் எந்தக் கட்சி சார்பையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், மார்ட்டினின் உறவினர்கள் அவரை ட்ரம்ப் ஆதரவாளர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,உள்ளூர் கோல்ஃப் மைதானத்தில் பணிபுரிந்த மார்டின் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மார்ட்டினுடன் பணிபுரியும் சக ஊழியர்கள், எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்து சக்திவாய்ந்த நபர்கள் தப்பித்து விடுகிறார்கள் என்று மார்டின் விரக்தியில் இருந்ததாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிபரைத் தொடர்பு கொண்டதாகவும், விசாரணைகள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அட்டர்னி ஜெனரல் பமீலா பாண்டி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ட்ரம்புடன் பேசியதாக கூறியுள்ள அமெரிக்க கருவூல் செயலாளர் (Scott Bessent) ஸ்காட் பெசென்ட், அதிபரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்த FBI அதிகாரிகளுக்கு பெசென்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், FBI அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் Karoline Leavitt கரோலைன் லீவிட் பாராட்டியுள்ளார்.

ஏற்கெனவே 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரச்சாரத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அப்போதே பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரண்டாவது முறை ட்ரம்ப் கோல்ப் விளையாடி கொண்டிருந்த போது எஸ்டேட்டில் நுழைந்த ரூத் என்ற நபர் ட்ரம்ப் மீது சுடுவதற்குள், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரைப் பிடித்தனர். கடந்த ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரூத்துக்கு இந்த மாதம் தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த புதன் கிழமை, அமெரிக்க கேபிடல் கட்டிடத்தின் மேல் துப்பாக்கியுடன் சென்ற ஒரு மர்ம நபரை வாஷிங்டன் காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத் தக்கது.

Tags: US President TrumpgunMar-a-Lago estatekilled a 21-year-oldSecurity officers
ShareTweetSendShare
Previous Post

பொய் பொய்யாக பேசும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – போட்டு தாக்கிய ஜனநாயக கட்சி ஆளுநர் – சிறப்பு தொகுப்பு

Next Post

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies