சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மார்ச் 5ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்வதற்காக கொலீஜியம் குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்குமாறு, மத்திய அரசுக்கு கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
















