அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமானோர் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும், திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்முறையும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகுகள் மூலம் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
இதனை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் இலங்கையில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை இங்கு கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தல்களை வழங்கினார்.
















