கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்மன் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் பிரம்மாண்ட அம்மன் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஆண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் சிற்ப கூடத்தில், சிலையை வடிவமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சிலை வடிவமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
இதையடுத்து 51 அடி உயரமும், 65 டன் எடையும் உள்ள பஞ்சலோகத்தால் ஆன ஆதிபராசக்தி சிலை, ராட்சத லாரி மூலம், பாதுகாப்புடன் பனைமரத்துபட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
















