தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல் இதற்கு முன்பு நடந்த தேர்தலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்குப்பதிவு நாளன்று 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே தபால் வாக்குகள் எண்ணப்படும் என கூறிய அவர், நாட்டுக்கே முன்னுதாரணமாக மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இந்த தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த முறை தமிழக தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும் எனவும் ஞானேஷ்குமார் கூறினார்.
















