நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன் 26 ஆண்டுகள் வாழ்ந்து வந்த சங்கீதா, அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சங்கீதா, விஜய் தன்னையும், தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நடிகையுடன் விஜய் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் சங்கீதா குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
















