பவானி ஜமக்காள நெசவுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஜமக்காள தயாரிப்புகளை நவீன வடிவில் அறிமுகம் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில், முன்பு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஜமக்காள நெசவில் ஈடுபட்டு வந்தன. ஆனால் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக தரைவிரிப்புகளின் பயன்பாடு குறைந்து, ஜமக்காள நெசவு மங்கிப் போனது. இந்நிலையில் பவானி ஜமக்காள நெசவுத் தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஜமக்காள தயாரிப்புகளை நவீன வடிவில் அறிமுகம் செய்துள்ளது.
இவை, மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து ராம்ராஜ் கடைகள் மற்றும் ஆன்லைன் தளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, “அன்புடன் பவானி” என்ற சிறுவர் நூலும், அமர் ரமேஷ் எழுதிய “ஜமக்காளம்” குறித்த சிறப்பு தொகுப்பு நூலும் ஆவணமாக வெளியிடப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராம்ராஜ் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், பாரம்பரிய நெசவுகளுக்கும் புதிய முகம் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் எனக் கூறினார். மேலும், ஜமக்காள நெசவை மீட்டெடுப்பது ஒரு சமூகப் பொறுப்பு என கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
















