ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து தேநீர் தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ரயில்களில் உள்ள மின்சார பிளக்குகள் மிகக் குறைந்த மின் அழுத்தத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. கெட்டில் போன்ற அதிக வாட்ஸ் கொண்ட சாதனங்களை இணைக்கும்போது, மின் சுமை அதிகமாகி மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீப காலமாக பயணிகள் சிலர் ரயிலில் மின்சார கெட்டில், ஹேர் டிரையர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் மின்சாரக் கெட்டில் பயன்படுத்தி தேநீர் தயாரிக்க முயன்றுள்ளார்.
இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பயணியின் PNR எண் மற்றும் விவரங்களை தெரிவிக்குமாறு, ரயில்வே சேவா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
















