சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மானாமதுரை பர்மா காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது மகளுடன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒருவருடன் தகராறு ஏற்பட்டதில் காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் ஆனந்தன், மருத்துவமனையில் அளித்த சிகிச்சையை ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டார்.
















