திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 2 ராட்சத மரங்கள் மீது மோதியது. அப்போதும் நிற்காமல், மகாலட்சுமி என்ற காவல் ஆய்வாளரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும், மற்றொரு வீட்டின் முகப்பின் மீதும் லாரி மோதியது.
இதில், வீட்டிலிருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















