திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக, மேலக் கோயிலில் சுவாமி சண்முகருக்கும், வள்ளி தெய்வானை அம்பாள்களுக்கும் ஆயிரம் லிட்டர் பால், 2 ஆயிரம் கிலோ பழங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா பக்தி கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானை அம்பாளுடன், பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
முன்னதாக, வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.
















