மாசி மகத்தையொட்டி மெரினா கடற்கரையில் நடந்த பல்வேறு கோயில்களின் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசி மாதப் பிறப்பு, மாசி மக நட்சத்திரம் மற்றும் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் மாசி மகம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான மாசி மக விழாவையொட்டி பல்வேறு கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடலில் மூழ்கி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















