சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமசுந்தரேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நிலையில், 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாசி மக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சர்வ அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















