ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவில் சில இஸ்லாமிய சமுகங்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரூபிகா லியாகத், உலக நாடுகளில் போர் காரணமாக இஸ்லாமியர்கள் துன்பத்தில் உள்ள சூழலில், இந்திய இஸ்லாமியர்கள் அமைதியுடன் வாழ்க்கையை நடத்துவதாகவும், இந்தியாவில் மசூதிகள் திறந்திருப்பதால், அவர்களால் எளிதில் தொழுகை செய்ய முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பெரும்பான்மை இந்துக்களின் சகிப்புத் தன்மையே காரணம் எனக் கூறிய ரூபிகா,இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும், குற்றம்சாட்டுவதற்கு முன் இஸ்லாமியர்கள் கண்ணாடியை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















