திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் நடப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தற்போது நவீன மயமாக்கப்பட்ட மணப்பாறை ரயில் நிலையத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்காக, மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் நட்டுவைத்திருந்த கட்சி கொடிகளை நகராட்சித் துறையினர் அகற்றினர்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
















