மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், ஈரானால் தாக்குதலுக்கு உள்ளானது.
இஸ்லாமிய மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுளை ஈரான் அச்சுறுத்தி வருகிறது.
குவைத், கத்தார், சவுதி, பஹ்ரைன் போன்ற நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இத்தகைய சுழலில், குவைத் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் தூதரக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு அடர்த்தியான கரும்புகை வெளியேறியது. தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நகரம் முழுவதும் அபாயச் சங்குகள் முழங்கின.
மேலும், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்குள்ளான தூதரகத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
















