ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தைக் குறிவைத்து அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் உறுதிபடுத்தியுள்ளது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஈரானின் எந்தவொரு அணு சக்தி உள்கட்டமைப்பிலும் இதுவரை தாக்குதல்கள் இல்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு முகமை தெரிவித்திருந்தது.
இருப்பினும் அதனை நிராகரித்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் முக்கிய அணு சக்தி வளாகமான நடான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகமைக்கான ஈரானிய தூதர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதனால் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
















