திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ஒருவரையொருவர் பெல்டால் அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. இதனால் நேற்றும், இன்றும் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள நேரடியாக வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த பெல்டால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கிருந்த மற்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கோயில் பாதுகாப்பு ஊழியர்கள் இரு குடும்பத்தாரையும் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பொறுமைகாத்து, பிற பக்தர்களிடம் நட்புடன் பழக வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
















