ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள 74 கடுமையான எச்சரிக்கைகளை பட்டியலிட்டு வெள்ளை மாளிகை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலம் முதல் தற்போது வரை சுமார் 74 முறை “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடந்த யூனியன் உரையின்போது, “ஈரான் உலகின் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் முக்கிய நாடாக உள்ளது என்றும், “ஈரானை அணு ஆயுதம் ஏந்த தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என டிரம்ப் முழங்கியிருந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
















