மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி என்பவர், காய்கறி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக சில தினங்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மதுபோதைக்கு அடிமையான நிலையில், சமயநல்லூர் – சோழவந்தான் சாலையில், மதுபானக் கடை எதிரில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே, மது அருந்திய நிலையில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















