திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர், கட்சியில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை எனக் குற்றம் சாட்டி தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.
தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், பல ஆண்டுகளாக திமுகவில் இருந்த போதிலும், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ராதாகிருஷ்ணன், வெற்றி தமிழர் முன்னேற்ற கழகம் என்ற பெயரில்
புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
சமூக நீதி பற்றி பேசும் திமுக மாவட்ட தலைமை, சாதி வேறுபாடு பார்ப்பதாக ராதாகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்தார்.
















