ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி அண்மையில் கொல்லப்பட்டார்.
இதனை கண்டித்து ஸ்ரீநகரில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதையொட்டி, வன்முறை ஏற்படாமல் தடுக்க ஸ்ரீநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
















