சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் தூதரக கட்டடம் சேதமடைந்தது.
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்க தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து தகர்த்து வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈரான் அனுப்பிய நான்கு டிரோன்களில் இரண்டு டிரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு டிரோன்கள் கட்டடத்தை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தூதரக கட்டடத்தில் சிறிய அளவில் தீ விபத்தும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்
















