பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது.
சொந்த தயாரிப்பான HQ-9B வான் பாதுகாப்பு கவசத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து சீனா பயன்படுத்தி வருகிறது. 260 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து வரும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பை பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சீனா விற்பனை செய்திருந்தது.
இதனிடையே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாததால், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
இதனை கருத்தில் கொண்ட ஈரான், தனது சொந்த தயாரிப்பான பாவர்-373 வான் பாதுகாப்பு கவசத்துடன் சீன தயாரிப்பையும் பயன்படுத்தி வந்தது.
ஆனால், இந்த 2 பாதுகாப்பு கவசங்களையும் மீறி இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்..
இரண்டாவது முறையாக சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளதால், அதன் செயல்திறன் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
















