ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.
கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பூரிம் பண்டிகை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில்,ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் பல நகரங்களில் பொது இடங்களில் கொண்டாடப்படும் பூரிம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,போர் பதற்றம் காரணமாக டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடம், தற்போது பாதுகாப்பு காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது.
பூரிம் பண்டிகையை கொண்டாட நினைத்த அங்கிருந்த மக்கள், பல வண்ண உடைகளை அணிந்தும்,
பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
















