மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தனிப்படை காவலர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக புகாரளித்த நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமென சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிகிதாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நிகிதா, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது நிகிதாவின் கருத்தை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிகிதா, புகார் தொடர்பாக தான் எந்த அழுத்தமும் தரவில்லை எனக் கூறினார்.
மேலும், தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்து சென்று விசாரித்ததும் தனக்கு தெரியாது எனவும் நிகிதா விளக்கம் அளித்தார்.
















