புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயையை முன்கூட்டியே வரவு வைக்கப்படவுள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதியுதவியாக 2 ஆயிரத்து 500 ரூபாயை புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையான 2 ஆயிரத்து 500 ரூபாயை பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே வரவு வைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குரிய நிதியுதவியாக குடும்பத் தலைவிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் மகளிர் உதவித்தொகை முன்கூட்டியே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
















