தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முயன்று வரும் ஜப்பானின் கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது.
ஜப்பானின் தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ தயாரித்த ‘கைரோஸ் 3’ ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறி தோல்வியடைந்தது.
மேற்கு ஜப்பானில் உள்ள ‘ஸ்பேஸ் போர்ட் கி’ ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7:40 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 69 வினாடிகளில், பசிபிக் பெருங்கடலுக்கு மேல் 29 கிலோமீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ராக்கெட் தானாகவே வெடித்துச் சிதறியது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு 2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த முறை, தைவான் விண்வெளி முகமை மற்றும் ஜப்பானின் ஆர்க்கெஜ் ஸ்பேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 5 சோதனை செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் வைக்கப்பட்டிருந்தன.
















