தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா – ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
ஜியாங் சூகின் என்பவர் சீனாவின் பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவ துறை பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் யூடியூப்பில் நடத்தி வந்த வரலாற்றை முன்னறிவித்தல் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தற்போது நடைபெற்று வரும் புவிசார் அரசியல் சூழல்கள் குறித்து இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே 3 முக்கிய ஆருடங்களை கூறியிருந்தார். அதில் முதலாவதாக 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார் என ஜியாங் சூகின் தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, ட்ரம்ப் பதவியேற்றவுடன் ஈரான் மீது போர் தொடுப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தும் எனவும் கணித்திருந்தார்.
இந்த 2 ஆருடங்களுமே தற்போது பலித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் கூறிய 3வது ஆருடம்தான் மிகவும் முக்கியமானது. ஈரானுக்கு எதிரான போரில் ட்ரம்ப் படுதோல்வியை சந்திப்பார் எனவும், இது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் 2 ஆருடங்கள் பலித்துள்ளதால், 3ஆவது ஆருடமும் நிச்சயமாக பலிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















