சிவகங்கை அருகே குப்பையில் தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிக தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் வசித்து வரும் டார்ஜிலின் என்பவரின் குழந்தை சிறிய கைப்பையில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகையை குப்பை தொட்டியில் போட்டுள்ளது.
குப்பையில் நகைகளை கண்ட தற்காலிக தூய்மை பணியாளர் செல்வி அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் நகை உரிமையாளரை கண்டறிந்து அதனை ஒப்படைத்துள்ளனர். நகையின் உரிமையாளர் தற்காலிக தூய்மை பணியாளர் செல்வியின் நேர்மையை பாராட்டி அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
















