சைதாப்பேட்டை அருகே மாநகர அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை சைதாப்பேட்டை 3வது பிரதான சாலை அருகே தி. நகரில் இருந்து வந்த மாநகர அரசு பேருந்தும் பல்லாவரத்திலிருந்து வந்த கனரக வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கனரக வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஜீவன் ராஜ் காயமடைந்தார். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பணிகள் காயங்களின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
















