நீலகிரி மாவட்ட எல்லையில், கேரள அரசின் பெயர் பலகை வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் தாளூர் பகுதியில், கேரள மாநிலம் சார்பில் வரவேற்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, கேரளா – நீலகிரி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி எல்லையில் அத்துமீறி கேரள அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தமிழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுதொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், கூடலூர் பகுதி மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
















