தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது என UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அவருடன் தமிழ் ஜனம் செய்தியாளர் சம்பத்குமார் நடத்திய கலந்துரையாடலில், பெற்றோரின் ஊக்கம், உதவி இல்லாவிட்டால் சாதித்திருக்க முடியாது என தெரிவித்தார்.
முந்தைய வாய்ப்புகளில் தோல்வியடைந்த போதும் மனம் தளரவில்லை என்றும், சக நண்பர்களும் மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
குரூப்-1 தேர்வில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை அளித்தது எனறும், தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது என உணர்ந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
















