தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆட்சி மாற்றம் ஏற்படவும் வேண்டி, திருச்சியில் பாஜக மகளிர் அணி சார்பில் 108 சுமங்கலிகள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மலர்கொடி, மாநில துணைத்தலைவர் புவனேஸ்வரி, மண்டல தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது விநாயகர், முருகன், அம்மன், பெருமாள் மற்றும் சிவபெருமான் உள்ளிட்ட கடவுள்களை வணங்கி 108 பெண்கள் குத்துவிளக்கேற்றி வழிபட்டனர்.
















