ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போதும் காலையில் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற அச்சம் எழுவதாக ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரானில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் காரணமாக அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களைப் பாதுகாப்பாக தாயகம் மீட்கக் கோரி, அவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரானில் பாதுகாப்பற்ற நிலையிலும், மரண பயத்திலும் இருப்பதாக தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது சிறு சத்தம் கேட்டால் கூட குண்டு வீசப்பட்டு விட்டதோ என பதறியடித்து எழுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
















