இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இருவேறு இடங்களில் என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெங்களூரு – ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை நடத்தப்பட்டது.
அதில் 2 கிலோ சரஸ் ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, 78 கிலோ போதைப்பொருட்களை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
அதன் பேரில் அங்கு விரைந்த என்.சி.பி அதிகாரிகள் 78 கிலோ ஹாஷிஷ் ஆயில் மற்றும் விசைப்படகை பறிமுதல் செய்தனர்.
இந்திய கடலோர காவல் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
















