கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சேஷன் என்பவர் 6 ஆண்டுகள் விடாமுயற்சியாக படித்து யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் தற்போது இந்திய அளவில் 197வது இடம்பிடித்து அசத்தி உள்ளார்.
திருக்கோவிலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற புள்ளியல் துறை உதவி இயக்குனரான செல்வராஜ் என்பவரின் மகன் சேஷன் கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக அங்கு படிக்க முடியாமல் வீடு திரும்பிய சேஷன், 2022ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபடியே இணையதள வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து படித்து வந்தார்.
4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த அவர், தனது விடாமுயற்சியை கைவிடாமல் 5வது முறையாக தேர்வெழுதிய நிலையில் தற்போது இந்திய அளவில் 197 வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். அவருக்கு சால்வை, மாலை அணிவித்து உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
















