துபாயில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் விமான நிலையம் மூடப்பட்டது, இதனால் தமிழகத்தில் இருந்து அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற 12 பேர் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டு உதவிகோரப்பட்ட நிலையில், அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாஜக என்.ஆர்.ஐ பிரிவு உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன் பேரில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த வானதி சீனிவாசனை அனைவரும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
















