டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நடப்புச் சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் நாடு முழுவதிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
அகமதாபாத் மைதானம் வெளியே குவியத் தொடங்கிய ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியும், இந்திய தேசியக் கொடியை ஏந்தியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா தனது உலகக் கோப்பை மகுடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
















