தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை வழங்கிய திமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தையும் கொடுத்தது.
அதே போல தேமுதிகவுக்கு 8 தொகுதிகளை வழங்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதே தொகுதிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் பேசிய விசிக நிர்வாகி ஒருவர், 2019ம் ஆண்டு முதல் கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு எம்.பி சீட் வழங்கவில்லை என தெரிவித்ததோடு, தேமுதிகவை விட குறைவான தொகுதி வழங்குவதை ஏற்க முடியாது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் தொகுதி ஒதுக்கீட்டில் நெருக்கடி நிலவி வருவதால் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















