வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது.
இதனால் கோடை காலத்தை கருத்தில் கொண்டு மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
















