நீலகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாட சென்ற சிறுத்தை உரிமையாளரைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் உணவு தேடி குடியிருப்பு அருகே வந்த சிறுத்தை வீட்டின் முன் இருந்த வளர்ப்பு நாயை தாக்கி வேட்டையாட முயன்றது. அப்போது வளர்ப்பு நாயின் அலறல் சத்தத்தை கேட்டு அதன் உரிமையாளர் வந்து பார்த்தபோது நாயை அங்கேயே விட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தை தப்பியோடியது.
















