தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் கிடைப்பது உறுதியானது.
இதில், திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும், அதிமுகவில் பாமகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை மூன்று மணியுடன் நிறைவடைவதாலும், ஆறு பேரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததாலும், அவர்களே போட்டியின்றி தேர்வாகின்றனர். இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
















