தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் விண்வெளிப் படை தலைமையகம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானிய மதத் தலைவரான கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாள்தோறும், தாக்குதல்கள் நடைபெறுவதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தினந்தோறும் ஓடிக் கொண்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முழுவதும் இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்தது.
இதில் IRGC-ன் ஒரு முக்கிய விண்வெளிப் படை தலைமையகம், 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள், ஈரானில் போராட்டங்களை ஒடுக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படும் ‘பசிஜ்’ துணை ராணுவப் படை தளம் மற்றும் IRGC-ன் தரைப்படைக்குச் சொந்தமான முக்கிய மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் வரை விரிவுபடுத்தியுள்ளதால், அங்கும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
















