மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க வேண்டுமென்றால், அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் அவசியம் என்றும், ஒருவேளை ஒப்புதலின்றி ஒரு உச்ச தலைவர் நியமிக்கப்பட்டால், அவர் வெகு நாட்கள் நீடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகனான முஜ்தபா கமேனிக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
















