பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சின்னத்தை கேட்க ராமதாசுக்கு உரிமை இல்லை என அன்புமணி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராமதாஸ் தன்னைத் தானே தலைவராக அறிவித்துக்கொண்டது கட்சி விதிகளுக்கு உட்பட்டது அல்ல என பதில்மனு தாக்கல் செய்த அன்புமணி,
ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ராமதாஸ் தற்போது முடிவெடுக்கும் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அன்புமணி,
ராமதாசை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்புமணியின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மார்ச் 11-ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
















