நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும் 108 நாட்கள் சத்ரு சம்ஹார சுப்ரமணிய திரிசதீ ஹோமம் நிகழ்வு தொடங்கியது. இதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, வரும் 18ம் தேதி மாநில அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசினப்படுத்தாமல் இருந்தால், நிச்சயம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவித்தார்.
எப்படிப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும், நம்முடைய வழிபாட்டு முறைக்குள் வரக்கூடாது என்றும், வரும் தேர்தலில் ஆன்மீகத்தை மதிக்கக்கூடிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
















