சென்னை திரிசூலம் பகுதியில் சிறுவன் உள்ளிட்ட இருவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்,
பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சிறையில் இருந்து வெளியே வந்து திரிசூலத்தில் ஒரு குடிசை வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், ஆறுமுகத்தையும், அவருடன் இருந்த 17 வயது சிறுவனான சதீஷையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாம்பரத்தில் பதுங்கி இருந்த 3 பேர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய நபர்கள் 4 பேரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
















