திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் அமைந்திருந்த விநாயகர் கோயில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சுத்தமல்லி விலக்கு அருகில் நீண்ட காலமாக இருந்து வந்த விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அப்பகுதியில் திரண்டனர். கோயிலை இடிக்கக் கூடாது என அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது…
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கோவில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.
பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் திமுக அரசு கோயில்களை இடித்து வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
















