இந்தியாவில் முதல் முறையாக இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது, விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார்.
13 வருடங்களாக கோமாவில் இருக்கும் ராணாவை கருணைக் கொலை செய்ய 2024 இல் அவரது பெற்றோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராணாவுக்கு குழாய் மூலம் உணவளிப்பதை நிறுத்தி அவரை கருணை கொலை செய்ய தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.
















